TamilAbout Me

'இந்த மெய்யும் பொறியும் கரணமும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்' என்று பாரதி விரக்தியோடு வியந்து கொண்டான். என் உடலையும் உள்ளத்தையும் ஐம்பத்தாறு ஆண்டுகளாகக் காப்பாற்றி வழிநடத்தி வரும் சக்தி கவிதைதான். கவிதா தேவியாக நான் வணங்கும் பராசக்திக்கே இந்த இணையதளத்தைக் காணிக்கையாகப் படைக்கிறேன்.

பொருளீட்டும் முயற்சியில் வழக்கறிஞனாக முப்பத்துஎட்டு கழித்திருந்தாலும் நாற்பத்தைந்தாண்டுகள் ஆண்டுகளுக்கு மேலாக நான் எழுதி வந்திருக்கும் கவிதைகளையும் இலக்கியச் சிந்தனைகளையும் உலகெங்கும் உள்ள இலக்கிய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலால் காலம் கடந்தாவது இந்த இணையதளத்தை உருவாக்கத் துணிந்தேன்.

என் கவிதைகளில் இசைப்பாடல்கள் அதிகம். அந்தப் பாடல்கள் அனைத்தும் இசையுடனேயே உதித்தவைளூ சொல்லும் இசையுமாய்ச் சேர்ந்து பிறந்தவைளூ எழுதிய பிறகு மெட்டமைக்கப்பட்டவை அல்ல. என் கவிதைகளையும் பாடல்களையும் நானே சொல்லிப் பாடிப் பதிவு செய்து இந்தத் தளத்தின் ஒலி-ஒளிப்பதிவுப் பகுதியில் வழங்குகிறேன்.

என் படைப்புகளில் இலக்கியம் பெரும்பகுதியானாலும் ஆன்மிகம் தத்துவம் சட்டம் அறிவியல் போன்ற துறைசார்ந்த படைப்புகளும் உண்டு.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சில நூல்கள் படைத்துள்ளேன். எனவே இது இருமொழித் தளமாக அமைய நேரிட்டது.

'என் சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் - என் கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்'

.